உடுமலை அருகே அரசு மதுபான கடை ஊழியர் அத்துமீறல் - வைரலாகும் வீடியோ!

உடுமலை அருகே அரசு மதுப்பானக்கடையில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் இரவு பத்து மணிக்கு மேல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மதுவை எடுத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.



திருப்பூர்: கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மதுவை எடுத்து செல்லும் அரசு மதுக்கடை ஊழியர் மீது உரிய விசாரணை நடத்தி அவரை பணியிடை நீக்க செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி அரசு மதுபான கடை (2323)ல் இருந்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக அங்கு பணியாற்றி வரும் ஊழியர் இரவு 10 மணிக்கு எடுத்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



கடந்த சில ஆண்டுகளாகவே மதுபானத்தை கள்ள மார்க்கெட்டில் ஊழியர் விற்பனை செய்து வருகின்றார். மேலும் இவர் பல ஊர்களில் ஏஜென்ட் வைத்து விற்பனை செய்து கொண்டுள்ளார். எனவே இவரை உரிய விசாரணை நடத்தி பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...