மருத்துவம் படித்தால் தீட்டா...? எங்களை சீண்டாதே - கோவையில் போஸ்டர் ஒட்டிய திமுகவினர்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாநகர மாவட்ட இளைஞர் அணியினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில், மருத்துவம் படித்தால் தீட்டா...? எங்கள சீண்டாதே #Ban NEET என்ற வாசகங்களும், மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.



கோவை: மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி லங்கா கார்னர், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக மாநகர மாவட்ட இளைஞர் அணியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மருத்துவ படிப்பு நுழைவு தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் திமுக மற்றும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் திமுக மாநகர மாவட்ட இளைஞர் அணியினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரில், மருத்துவம் படித்தால் தீட்டா...? எங்கள சீண்டாதே #Ban NEET என்ற வாசகங்களும், மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த போஸ்டர்கள், லங்கா கார்னர், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...