திருப்பூரில் வேர்கள் அமைப்பு சார்பில் பிளாஸ்டிக் கிளீனிங் டிரைவ் நிகழ்வு - பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

திருப்பூரில் வேர்கள் அமைப்பு சார்பில் பிளாஸ்டிக் கிளீனிங் டிரைவ் என்ற நிகழ்வு நடைபெற்றது. இதில், காலை ஆறு மணிக்கே பள்ளி மாணவர்கள் ஆர்வமுடம் கலந்துகொண்டு 20க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர்.



திருப்பூர்: மூளி குளத்தில் இருந்த பிளாஸ்டிக் கழிகளை வேர்கள் அமைப்பினருடன் இணைந்து பள்ளி மாணவர்களும் பங்கேற்று அகற்றினர். இதில் ஏராளமான தன்னார்வலர்களும் கலந்துகொண்டனர்.



திருப்பூர் மண்ணரை அருகில் வேர்கள் அமைப்பு பராமரிப்பில் உள்ள மூளி குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்தநிகழ்வில், 20 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பிளாஷ்டிக் கழிவுகள் மற்றும் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டன.



இதில், அதிகாலை 6 மணிக்கே பள்ளி குழந்தைகள் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.



குழந்தைகளுக்கு பிளாஷ்டிக் தவிர்ப்பது பற்றி விழிப்புணர்வு வந்திருந்த அமைப்பு நண்பர்கள் குழந்தைகளுக்கு விரிவாக விளக்கி கூறினார்கள்.



நேற்று மூளி குளத்தில் பிளாஸ்டிக் கிளீனிங் டிரைவ் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்தனர். வேர்கள் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த களப்பணியில் கலந்து கொண்ட அமைப்புக்கள் துப்புரவாளன், பனை காக்கும் நண்பர்கள் அமைப்பு, இளம் துளிர் அமைப்பு, Little kingdom பள்ளி, Aalaya Academy பள்ளி, இயற்கை ஏரி குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, Rotary Metal town, 'பசுமை திருப்பூர் நகரம்' அமைப்பு, நண்பர்கள் குழு அறக்கட்டளை மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நமக்கு இன்றைய நிகழ்வுக்கு பொருள் உதவி மற்றும் நிதி உதவி வழங்கிய அன்புடன் திருப்பூர், ஸ்ரீ அக்ஷய பாத்திரம், மாயா பவுண்டேஷன் மற்றும் அனைவருக்கும் நன்றி என வேர்கள் அமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...