வீட்டில் தஞ்சமடைந்த பெண் புள்ளி மான் - வனத்துறையினர் பத்திரமாக மீட்பு

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் வனத்தில் இருந்து வெளியேறிய பெண் புள்ளிமான் ஒன்று வழித்தெரியாமல் முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்குள் புகுந்தது. அவற்றை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வடக்கு காப்பு காடு என்ற பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.


கோவை: வீட்டில் பெண் புள்ளி மான் ஒன்று தஞ்சமடைந்திருப்பதாக வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்ற வனப்பணியாளர்களும், வேட்டை தடுப்பு காவலர்களும், புள்ளிமானை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஆணைகட்டி பகுதியில் உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பெண் புள்ளிமான் ஒன்று வழி தவறி வந்து தஞ்சமடந்துள்ளதாக வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.



இதனையடுத்து வனச்சரக அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில் வன பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பெண் புள்ளிமானை பத்திரமாக மீட்டு, ஆனைக்கட்டி காவல் சுற்று, ஆனைக்கட்டி வடக்கு காப்பு காடு பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...