கோவையில் நடைபெற்ற மகளிர் உரிமை திட்ட முகாமில் 6,89,262 விண்ணப்பங்கள் பதிவு - மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட முதல் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்களில் 6,89,262 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.



கோவை: ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் மற்றும் ஏற்கனவே விண்ணப்பம் பெற்று பதிவு செய்ய தவறியவர்கள் பதிவு செய்ய 18.08.2023, 19.08.2023, 20.08.2023 ஆகிய 3 தினங்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

கோவையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்கவுள்ளார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற இரண்டு கட்டமாக விண்ணப்பங்கள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, முதல் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 முதல் 04.8.2023 வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரையிலும் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற 1401 முகாம்களில் இதுவரை ஆனைமலையில் 42,731 விண்ணப்பங்களும், அன்னூரில் 43,509 விண்ணப்பங்களும், கோயம்புத்தூர் (வடக்கு)-ல் 1,60,160 விண்ணப்பங்களும், கோயம்புத்தூர் தெற்கு-ல் 75,409 விண்ணப்பங்களும், கிணத்துக்கடவில் 23,346 விண்ணப்பங்களும், மதுக்கரையில் 61,827 விண்ணப்பங்களும், மேட்டுப்பாளையத்தில் 58,072 விண்ணப்பங்களும், பேரூரில் 76,025 விண்ணப்பங்களும், பொள்ளாச்சியில் 62,306 விண்ணப்பங்களும், சூலூரில் 73,300 விண்ணப்பங்களும், வால்பாறையில் 12,577 விண்ணப்பங்களும் என மொத்தம் 11 வட்டங்களில் நடைபெற்ற முகாம்களில் 6,89,262 விண்ணப்பங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இம்முகாம்களில் குடும்ப அட்டைதாரர்கள் சில காரணங்களினால் விண்ணப்ப படிவம் பெறாமலும், சில குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்ப படிவம் பெற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட முகாம்களில் சமர்ப்பிக்காமலும் இருப்பது தெரிய வருகிறது.

மேலும் முதலமைச்சர் உத்தரவின்படி வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புச்சாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் மற்றும் ஏற்கனவே விண்ணப்பம் பெற்று பதிவு செய்ய தவறியவர்கள் பதிவு செய்ய 18.08.2023, 19.08.2023, 20.08.2023 ஆகிய 3 தினங்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள மகளிர் ஏற்கனவே விண்ணப்பதிருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இதுவரை விண்ணப்பிக்காத தகுதிவாய்ந்த மகளிர் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களாக முகாம்கள் நடைபெற்ற அதே இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. விண்ணப்ப படிவங்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுக்குரிய முகாம் நடைபெறும் இடங்களில் முகாம் பொறுப்பு அலுவலரிடம் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அதே முகாமில் அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...