பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை பணியை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கு.ராமகிருட்டிணன்

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை பகுதியில் தடுப்பணை கட்டுமான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மஞ்சக்கண்டி பகுதியில் தடுப்பணை கட்டுமான பணிகள் கேரள அரசு வேகமாக மேற்கொண்டு வருவது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையிலும், பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணிகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இதனிடையே தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி தேக்குவட்டை பகுதியில் கேரள அரசு மேற்கொண்டு வந்த தடுப்பணை கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இதைதொடர்ந்து தேக்குவட்டை பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஞ்சக்கண்டி பகுதியிலும் தடுப்பணை கட்டுமான பணிகளை கேரள அரசு துவக்கியுள்ளது. இந்த பகுதியிலும் தடுப்பணை கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மீதமுள்ள பகுதிகளிலும் தடுப்பணைகள் கட்டும் பணிகளை துவக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், கேரள அரசின் தடுப்பணை கட்டுமான பணிகள் காரணமாக பில்லூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து இருப்பதாகவும், இதன் காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுமென தெரிவித்தார். தமிழக அரசின் மெத்தனப்போக்கு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையாக வழக்கு நடத்தாத காரணத்தினால் தான் கேரள அரசு தடுப்பணை பணிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், தடுப்பணை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை எதிர்த்து நாளை க.க.சாவடி பகுதியில் கேரள எல்லையை ஒரு நாள் முழுவதும் மறிக்கும் முற்றுகை போராட்டம் 40 அமைப்புகள் சார்பில் நடைபெற இருப்பதை அவர் தெரிவித்தார்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...