பெண் கவுன்சிலர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு விழுந்த விவகாரம் – 5 பேரை பிடித்து சிறையில் தள்ளிய போலீசார்

கோவையில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த பெண் கவுன்சிலர் சித்ரா மற்றும் அவரது குடும்பத்தினரை ஒரு மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவெட்டு தப்பிச்சென்றது. இடத்தகராறு பிரச்சனையில் கவுன்சிலரை தீர்த்துக்கட்ட துணிந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: இடத்தகராறு பிரச்சனையில் மர்ம கும்பல் வெட்டிய அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த பெண் கவுன்சிலர் அவரது, கணவர் மற்றும் மகன் ஆகிய மூன்று பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி மன்ற பெண் கவுன்சிலர் மற்றும் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலை செட்டிபளையம் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. திமுகவைச் சேர்ந்த இவர், மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் 3 வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார்.

நேற்று முன் தினம் இரவு சித்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்தபோது, திடீரென முகமூடி அணிந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல், சித்ரா மற்றும் அவரது கணவர் ரவிக்குமார், மகன் மோகன் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

மூவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் மூவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை செய்த போது, சித்ராவிற்கும் வேறு ஒருவர் நபருக்கும் இருந்த இடத்தகராறு காரணமாக ராஜன் மூலம் அடியாட்களுடன் வந்து சித்ரா மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து தலைமறைவாக இருந்த ராஜன் (23), முத்துப்பாண்டி (24), முகேஷ்கண்ணன் (22), பிச்சை பாண்டி (23), ஶ்ரீரக்சித் (18) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...