போத்தனூரில் சிறப்பு குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கோவை போத்தனூர் பகுதியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் குடும்பம் (families for children) என்ற சிறப்பு குழந்தைகள் காப்பகம், மற்றும் செயிண்ட் ஜோசப்ஸ் ஹோம் என்ற முதியோர் இல்லம் ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமாரர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: போத்தனூர் அருகே செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் இல்லத்தில் மாவட்ட கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை போத்தனூரில் செயல்பட்டு வரும், குழந்தைகள் குடும்பம் (families for children) சிறப்பு குழந்தைகள் காப்பகம், மற்றும் செயிண்ட் ஜோசப்ஸ் ஹோம் முதியோர் இல்லம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் ஆசிக் அலி, மாவட்ட சமூகநல அலுவலர் அம்பிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் 24 பெண் குழந்தைகள் மற்றும் 19 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த காப்பகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் உணவு, அடிப்படை வசதிகள், கல்வி கற்பிக்கும் விதம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து, அங்கிருந்த குழந்தைகளிடம் கலந்துரையாடினார்.



அதனை தொடர்ந்து போத்தனூர் பகுதியில் உள்ள செயிண்ட் ஜோசப்ஸ் ஹோம் முதியோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து அங்கிருந்த முதியோர்களிடம் கேட்டறிந்தார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...