போத்தனூர் அருகே சாலையில் சரியாக மூடப்படாத பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து - பொதுமக்கள் அதிர்ச்சி!

கோவை - போத்தனூர் சாலையில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாமல் இருந்த நிலையில் இன்று, அவ்வழியாக சென்ற அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் சிக்கியதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.


கோவை: போத்தனூர் அருகே சாலையில் சரியாக மூடப்படதாக பள்ளத்தில் அரசு பேருந்து சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலை பராமரிப்பு பணிகள் மற்றும் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை - போத்தனூர் பகுதி ரயில்வே மண்டபம் அருகில் குழாய்கள் பதிப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது.

இந்நிலையில் அந்த பள்ளம் சரிவர மண்ணை கொண்டு மூடாமல் இருந்ததாக தெரிகிறது. இதனிடையே அவ்வழியாக போத்தனூரில் இருந்து துடியலூர் செல்லும் அரசு பேருந்து ஒன்று அந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

பேருந்தின் முன்பக்க ஒரு சக்கரம் பாதிக்கும் மேல் பள்ளத்தில் சிக்கி கொண்டது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு வேறு பேருந்திற்கு மாற்றி விடப்பட்டனர்.

தொடர்ந்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கொண்டு பேருந்து குழியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பேருந்து குழியில் இருந்து வெளியில் எடுத்தவுடன் காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...