திருப்பூரில் சாயக்கழிவு நீரால் மாசடையும் குளத்தை பாதுகாக்க கோரி இயற்கை ஆர்வலர்கள் மனு!

திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மூளி குளம் சாய மற்றும் சாக்கடை கழிவு நீரால் மாசடைந்து வருவதை தடுக்க வலியுறுத்தி, வேர்கள் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் சாய மற்றும் சாக்கடை கழிவு நீரால் மாசடைந்து வரும் குளத்தினை பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் 26 ஏக்கர் பரப்பளவில் மூளி குளம் அமைந்துள்ளது. இந்த குளமானது சாய, சாக்கடை கழிவு நீர் மற்றும் ஆகாயத் தாமரைகள் படர்ந்து யாருக்கும் பயன்படாத நிலையில் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம், தனியார் அமைப்புடன் இணைந்து குளத்தை சுத்தப்படுத்தியதை தொடர்ந்து குளத்தை யாரும் மாசுப்டுத்தாமல் இருக்க குளத்தை சுற்றிலுமுள்ள கரை பலப்படுத்தப்பட்டு கம்பி வேலியும் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக குளம் மாசடையாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குளத்தில் மீண்டும் சாய மற்றும் சாக்கடை கழிவுநீர் கலக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக குளம் மீண்டும் மாசடைய தொடங்கியுள்ளது.

குளக்கரையின் அருகிலேயே செயல்படும் சாய ஆலை நிறுவனங்கள் மற்றும் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் சாய ஆலை கழிவு நீராலும், மாநகராட்சி பகுதிகளிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீராலும் குளமானது மீண்டும் மாசடைய துவங்கியுள்ளது.



இதனை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என வேர்கள் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...