துடியலூரில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் பங்கேற்பு!

கோவை துடியலூர் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



கோவை: துடியலூரில் திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோவை துடியலூர் பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. துடியலூர் பகுதி கழக செயலாளர் அருள்குமார் தலைமை தாங்கினார். வட்டக் கழக செயலாளர் ராஜசேகர் வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்வில் வெ.நா.பழனியப்பன் அருள்மொழி, சண்முகசுந்தரம் கவுன்சிலர்கள், கற்பகம், புஷ்பமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,



தமிழ்நாட்டில் விவசாயிகளின் தேவையை அறிந்து இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் இலவச மின் இணைப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு உள்ளது.

பள்ளி மாணவர் மாணவியர் கல்வியை மேம்படுத்த காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, வீடு தேடி மருத்துவம். பெண்களுக்கு இலவச பஸ் சேவை வசதி போன்று பல்வேறு நலத்திட்டங்கள் தமிழ் நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.



மாநில அரசின் நிதி வசதிக்கு ஏற்ப கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் தகுதி உள்ளவர்களுக்கு கிடைக்க அரசு கவனத்துடன் ஆய்வு செய்து வருகிறது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற நீங்கள் உதவ வேண்டும்.

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாத நிலையில் சுமார் 300 கோடி மேல் பல்வேறு வளர்ச்சி பணிகளை செயல்படுத்தி முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார். எனவே திமுக அரசை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.



இந்த விழாவில் 10ஆம் வகுப்பு பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 57 மாணவ மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பரிசு வழங்கப்பட்டன.



தொடர்ந்து 50 பெண்களுக்கு தையல் மெஷின், மற்றும் காது கேட்கும் கருவி வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தொ. ஆ. ரவி ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், கிருஷ்ண குமார், மாவட்ட கவுன்சிலர் கார்த்தி, தலைமைசெயற்குழு உறுப்பினர்கள் டி.பி சுப்பிரமணியன் சண்முக சுந்தரம். பகுதிகழக பொருளாளர் ராக்கிமுத்து, மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...