உடுமலையில் பிரதமர் மோடி சிலையை தத்ரூபமாக வடிவமைத்த மண்பாண்ட கலைஞருக்கு குவியும் பாராட்டு!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள பாத யாத்திரையை நினைவுகூறும் விதமாக 'என் மண் என் மக்கள்'என்ற வாசகத்துடன் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை களிமண்ணால் உருவாக்கியுள்ள உடுமலையை சேர்ந்த மண்பாண்ட கலைஞரான ரஜினி ரஞ்சித்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



திருப்பூர்: பிரதமர் மோடியின் களிமண் சிலையை உருவாக்கிய உடுமலையை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் ரஜினி ரஞ்சித்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பூளவாடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். மண்பாண்டக் கலைஞரான இவர் தீவிர ரஜினி ரசிகராவார். இதனால் ரஜினி ரஞ்சித் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.

இவர் ஒவ்வொரு ரஜினி படம் தயாராகும் போதும் அந்த படத்தில் ரஜினியின் தோற்றத்தை களிமண் சிலையாக செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள பாத யாத்திரையை நினைவுகூறும் விதமாக 'என் மண் என் மக்கள்'என்ற வாசகத்துடன் இந்திய பிரதமர் மோடியின் உருவ பொம்மையை களிமண்ணால் உருவாக்கியுள்ளார்.

இதில் மோடி கையில் செங்கோல் ஏந்திய வண்ணம் காட்சியளிக்கிறார். வெறும் மண்பாண்டங்களை மட்டுமல்லாமல் அவ்வப்போது பிரபலமாகும் விஷயங்களை உருவமாக செய்யும் இந்த மண் பாண்டக்கலைஞருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன்ர்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...