கோவையில் பொருத்தப்பட்ட 6 தானியங்கி வேக அளவீடு கருவிகள் - சேவையை தொடங்கி வைத்த காவல் ஆணையர்!

கோவை மாநகரில் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் அவினாசி சாலை, சரவணம்பட்டி மற்றும் குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் முதல் முறையாக 6 தானியங்கி வேக அளவீடு கருவிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அதன் சேவையை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.


கோவை: கோவையில் மாநகர காவல்துறை சார்பில் 3 இடங்களில் அமைக்கப்பட்ட 6 தானியங்கி வேக அளவீடு கருவிகளின் சேவையை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.



கோவை மாநகரில் முதல் முறையாக அவினாசி சாலை, சரவணம்பட்டி மற்றும் குனியமுத்தூர் பகுதியில் போக்குவரத்து விதியை மீறி வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய தானியங்கி வேக அளவீடு கருவி பொருத்தப்பட்டுள்ளது.



3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 6 வேக அளவீடு கருவி மூலம் வேகமாக இயக்கப்படும் வாகனங்கள் கண்டறியப்பட்டு, அபராதமும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.



இந்த மூன்று இடங்களில் உள்ள தானியங்கி வேக அளவீடு கருவிகள், கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு துறையின் கட்டுப்பாட்டில் இயங்க உள்ளது.



தானியங்கி வேக கருவி மூலம் 40 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டிச் செல்லும் வாகனங்கள் கண்டறியப்படும்.

இதனையடுத்து அந்த வாகன உரிமையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் அபராத சலான் அனுப்பி வைப்பதோடு, உடனடியாக அபராதத்தை செலுத்த வலியுறுத்தப்பட உள்ளது. விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு மாநகர போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...