மூலனூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.25 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு!

மூலனூர் அடுத்த வண்ணாப்பட்டி ரங்கநாதபெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 23.5 ஏக்கர் புஞ்சை நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து, அறநிலையத்துறை உதவி ஆணையர் பி.ஜெயாதேவி முன்னிலையில் மீட்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: மூலனூர் அருகேயுள்ள ரங்கநாதபெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 23.5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மூலனூரை அடுத்த கொமாரபாளையம் கிராமம் வண்ணாப்பட்டி ரங்கநாதபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 23.5 ஏக்கர் புஞ்சை நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் அறிவுறுத்தலின் படி திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பி.ஜெயாதேவி முன்னிலையில் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது.

அப்போது தனி தாசில்தார் மகேஸ்வரன், செயல் அலுவலர், ஆய்வாளர் மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட ரங்கநாத பெருமாள் கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...