பாஜக அரசை கண்டித்து தாராபுரத்தில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தாராபுரத்தில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் சத்யா பழனிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: தாராபுரத்தில், திமுக மகளிர் அணி சார்பில், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், திமுக மகளிர் அணி சார்பில், மணிப்பூரில் மகளிருக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த முடியாத மோடி தலைமையிலான, ஒன்றிய பாசிச பாஜக அரசையும், மணிப்பூரில் ஆட்சி செய்யும் பாஜக அரசையும் கண்டித்து, தாராபுரம் அண்ணா சிலை முன்பு தி.மு.க. மகளிர் அணி சார்பில், மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் சத்யா பழனிக்குமார் தலைமையில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூரில் ஆட்சி செய்யும் பாஜக அரசை கட்டுப்படுத்த தவறிய மோடி தலைமையிலான மத்திய பாசிச பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி, பாஜக அரசின் மீது உள்ள தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



இந்நிகழ்சியில், திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனிதா செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட மகளிர் அணி தலைவருமான சரஸ்வதி ராஜேந்திரன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், காங்கயம், தாராபுரம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திமுக மகளிர் அணி சார்பில், சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...