நிலத்தை அபகரித்ததாக கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி தர்ணா!

கொண்டையம்பாளையம் பகுதியில் உள்ள தனது நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று அபகரித்து கொண்டதாக கூறி, கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற விவசாயி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


கோவை: தனது நிலத்தை அபகரித்து விட்டதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயியான இவர், கொண்டையாம்பாளையம் பகுதியில் உள்ள தனது நிலத்தை கடந்த சில வருடங்களுக்கு முன் எல்ஜிபி என்ற தனியார் நிறுவனம் மோசடி செய்து அபகரித்து விட்டதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

பின்னர் அவரை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்க அழைத்து சென்றனர்.

இது குறித்து விவசாயி ராஜேந்திரன் கூறியதாவது, இது சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கு முன்பு இருந்த மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, தனது நிலம் குறித்து நடவடிக்கை எடுக்கும் படி அறிவித்த நிலையில், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனது நிலத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து விவசாயி ஒருவர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...