பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் 4000 கி.மீ. பிரச்சார பயணம்!

ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது, கூட்டுறவு வங்கிகளை மாநில அரசிடமிருந்து பறிக்கும் நடவடிக்கைகளை கண்டித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 4000 கிலோமீட்டர் பிரச்சார பயணம் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே துவங்கப்பட்டது.


கோவை: ஒன்றிய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 4000 கிலோமீட்டர் பிரச்சார பயணம் துவங்கப்பட்டுள்ளது.



அதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் பிரச்சார பயணம் நடைபெற்றது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தினர் கலந்து கொண்டனர்.

ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகளை தனியார் மையமாக்கும் நடவடிக்கை, கூட்டுறவு வங்கிகளை மாநில அரசிடமிருந்து பறிக்கும் நடவடிக்கை, கிராம வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்கும் நடவடிக்கை போன்றவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.



மேலும், மேம்பட்ட வாடிக்கையாளர் சேவையை உறுதி செய்ய வேண்டும். மக்கள் சேமிப்பை மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்தப் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...