திருப்பூரில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாமிற்கான பணிகள் துவக்கம்!

திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முகாமிற்கு தேவையான பொருட்களை பிரித்து அனுப்பும் பணி வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று துவங்கியது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமிற்கான பணிகள் துவங்கியுள்ளன.

தமிழக அரசு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கான பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இதற்கான விண்ணப்ப பதிவு முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இதனிடையே தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்ற முடிவடைந்த நிலையில் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகின்ற 24ஆம் தேதி துவங்கப்பட உள்ளது.

இதற்காக திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 145 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 1,46,350 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப பதிவு செய்வதற்கு தேவையான பொருட்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பிரித்து அனுப்பும் பணி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...