டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்ட 2 யூடியூபர்களிடம் போலீசார் விசாரணை!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்ட ‘பேசு தமிழா பேசு’ யூடியூப் சேனலை சேர்ந்த ராஜவேல் நாகராஜ் மற்றும் இந்திய மக்கள் மன்றம் என்ற இயக்கத்தை நடத்தி வரும் வராகி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்ட 2 யூடியூபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த 7ஆம் தேதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.



இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த கூடுதல் டிஜிபி அருண் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் அவருக்கு தூக்கமின்மை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்கள் பதிவு செய்த எட்டு பேருக்கு மாநகர போலீசார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளித்திருந்தனர்.

இதில் யூடியூப் சேனலில் டிஐஜி விஜயகுமார் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்ட “பேசு தமிழா பேசு” என்ற யூடியூப் சேனலை சேர்ந்த ராஜவேல் நாகராஜ் மற்றும் இந்திய மக்கள் மன்றம் என்ற இயக்கத்தை நடத்தி வரும் வராகி ஆகிய இரண்டு பேரையும் விசாரணைக்கு ஆஜராக கூறிய நிலையில், இன்று ராமநாதபுரம் காவல் நிலையத்தில் இருவரும் ஆஜராகினர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...