சர்வதேச நீதி நாள் - உடுமலை பேருந்து நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்!

சர்வதேச நீதிநாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் நீதிபதிகள் M.மணிகண்டன் மற்றும் K.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சட்ட உதவி மைய சேவைகளை பெறுவது குறித்து எடுத்துரைத்தனர்.


திருப்பூர்: சர்வதேச நீதி நாளை முன்னிட்டு உடுமலை பேருந்து நிலையத்தில் வட்டசட்ட பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நேற்றைய தினம் (17.07.2023) "சர்வதேச நீதிநாள்"-ஐ முன்னிட்டு உடுமலைப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இதில் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியான, M.மணிகண்டன் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி, K.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே இலவச சட்ட உதவி மையத்தின் சேவைகள் மற்றும் மக்கள் அதை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.



இதில் வழக்கறிஞர்கள், அப்துல்நாசர், செந்தில்குமார், மகேஸ்வரன், சத்தியவாணி, தம்பிபிரபாகரன் மற்றும் உடுமலைப்பேட்டை சட்டம் ஒழுங்கு உதவி காவல் ஆய்வாளர்கள், சிவராஜ், தங்கவேல் பிற காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச சட்ட சேவைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...