கவனக்குறைவாக சிகிச்சையளித்தால் ஒருவர் பலி - பல்லடம் அருகே செயல்பட்டு வரும் அக்குபஞ்சர் சென்டர் முற்றுகை!

பல்லடம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் ரிஷி அக்குபஞ்சர் சென்டரில் இருதய சிகிச்சைக்காக வந்த சம்பத் என்பவருக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததால் உயிரிழந்ததாக கூறி, அவர்களது உறவினர்கள் அக்குபஞ்சர் சென்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள ரிஷி அக்குபஞ்சர் சென்டரில் கவனக்குறைவாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் ஒருவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரிஷி அக்குபஞ்சர் சென்டர் என்ற மினி கிளினிக் ஒன்று கடந்த ஒராண்டிற்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இந்த அக்குபஞ்சர் சென்டரில் பல்வேறு உடல் உபாதைகளுக்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பட்டேல் சாலை பகுதியை சேர்ந்த சம்பத் என்பவர் இருதய அடைப்பு காரணமாக உயிர் இழந்தார். இதற்கு காரணம் இந்த மருத்துவர் ரிஷி என்ற சித்தார்த்தன் என்பவர் அஜாக்கிரதையான முறையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இறந்த சம்பத் (55) என்பவருக்கு ஆஞ்சியோ செய்த பிறகு சிகிச்சை கொடுத்ததாகவும், ஆபத்தான நிலையிலும் மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்யாமல் போன் கூட எடுக்காமல் வெளிமாநிலத்தில் இருப்பதாக கூறியதாக தெரிகிறது.

அதனை நம்பி அவரும் காத்திருந்தததன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



இதுதொடர்பான பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...