பாஜக கண்டுகொள்ளவில்லை..! - பேரூராட்சித் தலைவர் உட்பட 4000 பேர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

சட்டப்பேரவை தேர்தலில் 5,000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று தந்த தங்களை பாஜக கண்டுகொள்ளவில்லை எனக்கூறி தாராபுரம் அடுத்த ருத்ராவதி பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் மற்றும் 7 வார்டு உறுப்பினர்கள் உட்பட 4000 பேர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த ருத்ராவதி பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் உட்பட சுமார் 5000 பேர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த ருத்ராவதி பேரூராட்சி தலைவராக இருப்பவர் கண்ணம்மாள். கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர் தேர்தலில் ருத்ராவதி பாஜவுக்கு ருத்ராவதியில் அதிகப்படியான வாக்குகள் கிடைத்தன.

இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் நீண்ட நாள்களாகியும் வராததற்கு கண்டனம் தெரிவித்த ருத்ராவதி பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் கூறியதாவது, எனது தலைமையில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 5,000க்கும் அதிகப்படியான வாக்குகளை பாஜகவுக்கு பெற்று கொடுத்துள்ளோம்.

இந்தப் பேரூராட்சியில் பாஜகவை சேர்ந்த 7 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், கட்சித் தலைமை இதுவரை எங்களை கண்டுகொள்ளவில்லை.



அதனால், ருத்ராவதி பேரூராட்சித் தலைவர் மற்றும் பாஜகவை சேர்ந்த 7 வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் பாஜகவின் முதலாவது பேரூராட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ள 4000க்கும் மேற்பட்டோர் வேறு கட்சியில் இணைய உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...