புலம்பெயர் தொழிலாளர்களும் நமது சகோதரர்கள் தான் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து!

திருப்பூரில் நடைபெற்ற தமிழ் மொழி கற்போம் திட்ட துவக்க விழாவிற்கு பின்னர் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், நம் தாய் மொழியை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக துவங்கப்பட்ட உன்னத திட்டம் தான் தமிழ் மொழி கற்போம் திட்டம் என தெரிவித்தார்.



திருப்பூர்: புலம்பெயர் தொழிலாளர்களும் நமது சகோதரர்கள் தான் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தமிழ் மொழி கற்போம் திட்ட துவக்க விழா நடைபெற்றது.



இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது,



தமிழ்நாடு முழுவதும் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் 20 லட்சத்திற்கும் மேல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருக்கின்ற நிலையில் அவர்கள் நம் சகோதரர்கள் போல என்பது வெறும் பேச்சளவில் மட்டுமல்ல.

அவர்களை அரவணைத்து நம் தாய் மொழியை அவர்களுக்கு வழங்குவதற்காக துவங்கப்பட்ட உன்னத திட்டம் தான் தமிழ் மொழி கற்போம் திட்டம். நம்மை தேடி நம்மை நாடி வருபவர்களுக்கு அவர்களது தாய் மொழியோடு நம் தாய் மொழியையும் கொடுப்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 71.9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. அவர்கள் தாய்மொழி எதுவானாலும் அதனோடு தமிழ் மொழியும் கற்றுக் கொடுக்கப்படும். மேலும் சென்னைக்கு அடுத்தபடியாக கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சி உள்ளது.

பல்வேறு மண்டல தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருப்பதன் மூலம் மக்கள் அரசு பள்ளிகளை நம்பி வருவதை உணர முடிகிறது. விரைவில் அனைவரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை தலைமைச் செயலாளர், பள்ளி கல்வித்துறை இயக்குனர், மாநகராட்சி மேயர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...