உடுமலையில் டாஸ்மாக் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது!

உடுமலை அடுத்த தளி சாலையில், டாஸ்மாக் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய தேனி வீரபாண்டியை சேர்ந்த மாரிமுத்து (28) மற்றும் மடத்துக்குளம் அடுத்த பாப்பான் குளத்தைச் சேர்ந்த வீரமுத்து(24) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த தளி சாலையில் டாஸ்மாக் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த எஸ்.வி.புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (44). இவர் மொடக்குபட்டி - தளிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகிறார்.

கடந்த ஜூலை 1-ம் தேதி இரவு 10.30 மணிக்கு ஜெய்பிரகாஷ் வேலையை முடித்துக் கொண்டு தன்னுடன் வேலை பார்க்கும் சேல்ஸ்மேன் சரவணன் என்பவரை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு ஆனைமலை சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

வாகனம் தளி அருகே வந்தபோது, இவர்களது வாகனத்திற்கு பின்னால் வந்த கார், ஜெயப்பிரகாஷ் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. அதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது, அந்தக் காரில் முகக்கவசம் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் மதுபானம் விற்ற பணத்தை கொடுங்கடா என்று பீர்பாட்டில் மற்றும் அரிவாளை காட்டி மிரட்டியதுடன், பையை எடுத்துச் சென்று வீசிவிட்டு சென்றனர்.

இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து ஜெயப்பிரகாஷ் தளி போலீசில் புகார் அளித்துள்ளார். அதைதொடர்ந்து உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாரன் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த சூழலில் டாஸ்மாக் பணியாளரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற, தேனி மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த மாரிமுத்து (28) மடத்துக்குளம் தாலுக்கா பாப்பான் குளத்தைச் சேர்ந்த வீரமுத்து(24) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து நான்கு சக்கர வாகனம் ஒன்றும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...