லண்டனில் உயிரிழந்த கோவை மாணவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அண்ணாமலை!

லண்டனில் உயிரிழந்த கோவையை சேர்ந்த மாணவர் ஜீவநாத் இல்லத்திற்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் அங்கு வந்த மாற்றுதிறனாளி ஒருவருக்கு மாதம் ரூ.3,000 அனுப்புவதாக அண்ணாமலை உறுதியளித்தார்.



கோவை: லண்டனில் உயிரிழந்த கோவை மாணவர் ஜீவநாத் குடும்பத்தினரை பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்த தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் ஜீவநாத். ஜீவநாத் கடந்தாண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் PG படிப்புக்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஜீவநாத் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த தகவல் ஜீவநாத் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததை அடுத்து சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் ஜீவ்நாத் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து இன்னும் முறையான தகவல் லண்டன் போலீசார் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. மாணவர் ஜீவநாத் குளிக்க சென்ற போது விபத்து நேரிட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என எந்த தகவலும் முறையாக வரவில்லை.

இதைத்தொடர்ந்து ஜீவநாத் உடல் கோவை கொண்டு வரப்பட்டு பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நரசிம்மநாயக்கன்பா பகுதியில் உள்ள கட்சி நிர்வாகியின் கல்யாண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.



அதனை தொடர்ந்து லண்டனில் இறந்த ஜீவநாத் சிவகுமார் வீட்டிற்கு நேரடியாக வந்து மலரஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

அப்பொழுது மாற்றுத்திறனாளி ஒருவர் தான் பெரிய நாயக்கன்பாளையம் பகுதியில் தோட்ட காவலாளியாக இருப்பதாகவும் இன்று உங்களை சந்திக்க வரும்போது என்னை வேலையை விட்டு நீக்கி விட்டார்கள் என்று கூறினார்.



இதனை தொடர்ந்து அந்த மாற்றுத்திறனாளியிடம் மாதம் 3000 ரூபாய் பாஜக கட்சி சார்பாக உங்களுக்கு நான் தருவதாக என்று உறுதிமொழி கொடுத்தார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...