திருப்பூரில் உலக அளவிலான இயற்கை சார் உற்பத்திக்கான சாய கண்காட்சி துவக்கம்!

திருப்பூர் அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப் கண்காட்சி வளாகத்தில் உலக அளவிலான இயற்கை சார் உற்பத்திக்கான சாய கண்காட்சி துவங்கியது. இந்த கண்காட்சியில் 40 அரங்குகளில் இயற்கை சார்ந்த உற்பத்திக்கான சாயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏராளமான பின்னலாடை உற்பத்தியாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.


திருப்பூர்: பழங்கரையில் உள்ள ஐ.கே.எப் கண்காட்சி வளாகத்தில் உலக அளவிலான இயற்கை சார் உற்பத்திக்கான சாய கண்காட்சி துவங்கியது.

திருப்பூர் அருகே பழங்கரையில் உள்ள இந்தியா நிட் பேர் கண்காட்சி வளாகத்தில் டெக்ஸ்டைல் எக்ஸ்டெலன்ஸ் நிப்ட்- டீ கல்லூரி சார்பில் 2-வது உலக அளவிலான இயற்கை சார்ந்த உற்பத்திக்கான சாயம் தொடர்பான கண்காட்சி நேற்று தொடங்கியது.



வருகிற எட்டாம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 40 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் திருப்பூர் பின்னலாடை துறை வளர்ச்சிக்கு தேவையான இயற்கை சாயங்கள், ராணுவ உடைகள் தயாரிப்பதற்கான சாயங்கள், ஆக்டிவ் வியர், விளையாட்டு ஆடைகள் தயாரிப்பதற்கான சாயங்கள், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலும், கோடைகாலத்தில் அணியக்கூடிய ஆடைகள் உற்பத்திக்கான சாயங்கள், சுமல் பிரி கார்மெண்ட்ஸ், கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



பின்னலாடை உற்பத்தியாளர்கள் தற்போது பருத்தியினால் ஆன ஆடைகள் தயாரிப்பில் இருந்து தங்களது கவனத்தை சிந்தட்டிக் ரக ஆடைகள் தயாரிப்பில் நகர்ந்துள்ளதால் அதற்கான இயந்திரங்கள் சாயங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.



இந்த கண்காட்சியை ஏராளமான பின்னலாடை உற்பத்தியாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...