கோவையில் மறுசீரமைக்கப்பட்ட நவீன அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்!

கோவை‌ சின்னவேடம்பட்டி அருகே மறுசீரமைக்கப்பட்ட நவீன அங்கன்வாடி மையத்தை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார். இதேபோல், கணபதி பகுதியில் புனரமைக்கப்பட்ட மாநகராட்சி பள்ளி வகுப்பறைகள்‌ மற்றும் கழிவறைகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் திறந்து வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி அருகே மறுசீரமைக்கப்பட்ட நவீன அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.3க்கு உட்பட்ட சின்னவேடம்பட்டி, அஞ்சுகம்‌ நகர்‌ பகுதியில்‌ மாநகராட்சி, லட்சுமி மில்ஸ்‌ நிறுவனம்‌ லிமிடெட்‌, சக்தி சுகாஸ்‌ லிமிடெட்‌, WOW EDUCARE மற்றும்‌ பாலச்சந்தர் ஆகியோர்‌ இணைந்து நமக்கு நாமே திட்டத்தில்‌ அப்ஸ்விங்ஸ்‌ எடுக்கேர் (UPSWINGS EDUCARE) நிறுவனம்‌ மூலம்‌ மறுசீரமைக்கப்பட்ட நவீன அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ கிராந்திகுமார்‌ பாடி மக்கள்‌ பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியில்‌ மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்‌. கல்வி விளையாட்டு உபகரணங்கள்‌ 118க்கும்‌ மேற்பட்ட விளையாட்டு கல்வி பொம்மைகள்‌ மூலமாக தொலைக்காட்சி வாயிலாக கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரட்டை திண்ணை, விளையாட்டு உபகரணங்கள்‌, பூங்கா மற்றும்‌ குடிநீர், கழிவறை வசதிகள்‌ செய்யப்பட்டுள்ளது. 40க்கும்‌ மேற்பட்ட மாணவர்கள்‌ இந்த அங்கன்வாடி மையத்தில்‌ கல்வி பயின்று வருகின்றனர்.



அதனை தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.30க்குட்பட்ட கணபதி மாநகராட்சி துவக்க பள்ளியில்‌ மாநகராட்சி நிர்வாகம்‌, சி.ஆர்.ஐ.பம்ஸ்‌ மற்றும்‌ கோவை‌ ரவுண்டு டேபிள்‌, லேடீஸ்‌ சர்கிள்‌ ஆப்‌ இந்தியா உள்ளிட்ட தன்னார்வலர்கள்‌ இணைந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ ரூ.30 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புனரமைக்கப்பட்ட வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறையை மாநகராட்சி ஆணையாளா்‌ பிரதாப்‌ திறந்து வைத்தார்.



இதன் பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

கோவை‌ கணபதி மாநகராட்சி பள்ளியின்‌ சி.ஆர்.ஐ.பம்ஸ்‌ மற்றும்‌ கோவை‌ ரவுண்டு டேபிள்‌, லேடீஸ்‌ சர்கிள்‌ ஆப்‌ இந்தியா உள்ளிட்ட தன்னார்வலர்கள்‌ கணபதி மாநகராட்சி துவக்கபள்ளியை தத்தெடுத்து பராமரிக்கவும்‌, புனரமைக்கவும்‌, தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தரவும்‌ இசைவு தெரிவித்துள்ளனர்.

முறைப்படி விண்ணப்பத்தால்‌ உரிய பரிசீலனை செய்யப்படும்‌. மேலும்‌, கோவை மாநகராட்சியில்‌ நமக்கு நாமே திட்டத்தில்‌ பல்வேறு பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர தன்னார்வலர்கள்‌ முன்வர வேண்டும்‌.

நமக்கு நாமே திட்டத்தில்‌ வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறை அமைக்க நிதி வழங்கிய தன்னார்வலா்களுக்கு நன்றியையும்‌ பாராட்டுகளையும்‌ தெரிவித்து கொள்கிறேன்‌.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...