மாமன்ற கூட்டத்தில் பேச உரிய அங்கீகாரம் வேண்டும் - அதிமுக உறுப்பினர்கள் திருப்பூர் மேயரிடம் கோரிக்கை மனு!

மாமன்ற கூட்டத்தில் பேச உரிய அங்கீகாரம் வழங்க வலியுறுத்தி, திருப்பூரில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.



திருப்பூர்: மாமன்ற கூட்டத்தில் பேச உரிய அங்கீகாரம் வழங்க வலியுறுத்தி, அதிமுக உறுப்பினர்கள் மேயரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுகவைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சியில் விதிக்கப்பட்டுள்ள குப்பை வரி சம்பந்தமான சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள குப்பை வரி, சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவை குறித்து மேல்முறையீட்டு குழு அமைக்க வேண்டும்.

மேலும், மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்.

இவ்வாறான கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...