ஆனைகட்டி அருகே தனியார் ரிசார்ட் நீச்சல் குளத்த்தில் மூழ்கி இளைஞர் பலி!

கோவை ஆனைகட்டியில் உள்ள தனியார் ரிசார்ட் நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற வைசாக் (24) என்ற இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் உடலை கைப்பற்றிய தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே தனியார் ரிசார்டின் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பி.என்.புதூர் பகுதியை சேர்ந்த நஞ்சுண்டன் என்பவரது மகன் வைசாக் (24). இவர் கோவையில் உள்ள தனியார் பிபிஓ ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வைசாக் தனது நண்பர்களுடன் ஆனைகட்டியில் உள்ள கார்னிஷ் ரிசார்ட் என்ற தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது நண்பர்களுடன் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில், குளித்துக் கொண்டிருந்த போது, வைசாக்கிற்கு திடீர் என வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் போலீசார் வைசாக்கின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...