வால்பாறை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து காட்டெருமை உயிரிழப்பு!

வால்பாறை அருகேயுள்ள பச்சைமலை எஸ்டேட் தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்த குடி தண்ணீர் கிணற்றில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு காட்டெருமை உடலை மீட்டு அடக்கம் செய்தனர். என் பின்னர் தண்ணீர் சுத்தம் செய்த பிறகு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.



கோவை: வால்பாறை அருகே குடிதண்ணீர் கிணற்றில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்களுக்கு குடி தண்ணீர் பயன்படுத்த 20 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை தொழிலாளர்களுக்கு இயந்திரம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.



இந்த தண்ணீர் தொட்டியானது வேலி அமைத்து பாதுகாப்பாக செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு தண்ணீர் தொட்டி வழியாக வந்த காட்டெருமை ஒன்று தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்துள்ளது.



இந்த நிலையில் இன்று காலையில் தண்ணீர் வினியோகம் செய்வதற்கு வந்த தொழிலாளி தண்ணீர் தொட்டிக்குள் காட்டெருமை இறந்து கிடப்பதை பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வன சரகர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறை அதிகாரிகளும், எஸ்டேட் நிர்வாகத்தினரும் காட்டெருமையை உடலை பல மணி நேரம் போராடி தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்டு அடக்கம் செய்தனர்.

இதன் பின்னர் தண்ணீரை சுத்தம் செய்து பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...