தமிழகத்தில் முதல்முறையாக அரசு பணியாளர்களின் குழந்தைகளை கவனிக்க குழந்தைகள் காப்பகம்!

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வரும் ஊழியர்களின் குழந்தைகளை கவனிப்பதற்காக பகல் நேர குழந்தைகள் காப்பகத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று துவங்கி வைத்தார். இந்த காப்பகத்தில் 4 அங்கன்வாடி ஊழியர்கள், ஒரு தனியார் ஆசிரியர் என 5 பேர் குழந்தைகளை கவனித்து கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர்.



கோவை: தமிழகத்தில் முதல் முறையாக அரசு ஊழியர்களின் குழந்தைகளை கவனிப்பதற்கான சிறப்பு குழந்தை காப்பகம் கோவை ஆட்சியர் திறக்கப்பட்டுள்ளது.



பொதுவாக பணிக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டின் அருகே உள்ள அங்கன்வாடி மையங்களில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று வருகின்றனர். இதே போல கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வரும் ஊழியர்களின் குழந்தைகளை கவனிப்பதற்காக குழந்தைகள் பகல்நேர சிறப்பு காப்பகம் திறக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி பங்களிப்புடன் அமைக்கப்பட்டு உள்ள இந்த குழந்தைகள் காப்பகத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று துவங்கி வைத்தார்.



4 அங்கன்வாடி ஊழியர்கள், ஒரு தனியார் ஆசிரியர் என 5 பேர் குழந்தைகளை கவனித்து கொள்ள நியமிக்கப்பட்டு உள்ளனர்.



இந்த காப்பகத்தில் 7 வயதிற்குள் உள்ள குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர்.



விளையாட்டு, உடற்பயிற்சி, மற்றும் குழந்தைகளுக்கான பாடல்களை ஒளிப்பரப்ப தொலைக்காட்சி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விளையாடும் குழந்தைகள் கிழே விழுந்தாலும் அடிபடாமல் இருக்க மேட் போடப்பட்டு உள்ளது.



அதே போல பெற்றோர்கள் கொடுத்துச் செல்லும் உணவுகள் மட்டுமின்றி சத்து மாவுகளும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. தினமும் அரசு ஊழியர்களின் பணி நேரங்களில் இந்த காப்பகத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்குச் செல்லும் அரசு ஊழியர்களின் குழந்தைகளும் மாலை நேரத்தில் காப்பகங்களில் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தன்னார்வ தனியார் பள்ளி பங்களிப்புடன் ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கப்பட்டுள்ள குழந்தைகள் பகல் நேர காப்பகத்திற்கு ஊழியர்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பு கிடைத்துள்ளது.



முதல் நாளிலேயே சுமார் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பகல் நேர காப்பகத்தில் விடப்பட்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...