கோவை தெற்கு தொகுதியில் நியாய விலை கடைகளில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம், ராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.



கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள நியாயவிலை கடைகளில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். 



கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம், ராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது, நியாய விலை கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், விற்பனை முனைய இயந்திரத்தில் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட பொருள்களின் விவரங்கள், கடைகளில் தற்போது உள்ள இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார். 



மேலும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இங்கு பொருள்கள் வழங்கப்படுவதை கண்ட அவர் திட்டத்தை கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு தனது நன்றியை தெரிவித்தார். 



பாஜக மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் ரேஷன் கடையில் ஆய்வு செய்தது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...