துடியலூரில் உலக போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி!

துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிகள் சார்பில் உலக போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை துடியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வனிதா தொடங்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே உலக போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிகள் சார்பில் உலக போதைப்பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் அறிவுறுத்தல்படி நடைபெற்ற இந்த பேரணியை துடியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வனிதா தொடங்கி வைத்தார். 



இந்த பேரணியானது துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கி வடமதுரை, துடியலூர் காவல் நிலையம், சந்தை பகுதி வழியாக மீண்டும் பேருந்து நிறுத்தம் வந்தடைந்தது. இந்த பேரணியின் போது ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியபடி வந்தனர். 



மேலும் பொதுமக்களிடம், போதை பழக்கத்தால் உடல் நலம், மன நலம், குடும்ப நலம், சமூக நல பாதிப்புகள் மற்றும் தொழில், பொருளாதார பாதிப்புகள் ஏற்படுதாகவும், சட்டப்பிரச்சனைகள் வருவதாகவும் கூறி போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்தான நோட்டீஸ்களையும் விநியோகம் செய்தனர். 

இந்த பேரணியில் துடியலூர் சிறப்பு துணை ஆய்வாளர்கள் சரவணன், சின்னராஜ், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி என்.எஸ்.எஸ் தலைவர் கேசவசாமி, என்.எஸ்.எஸ் ஆசிரியர்கள் மாரியப்பன், ஜெயபிரகாஷ், ஸ்ரீஜா, ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ் ஆசிரியர்கள் கார்த்தி, வினோ, கல்லூரி போதைப்பொருள் ஒழிப்பு இயக்க ஆசிரியர்கள் பூபால்ராஜ், வெங்கடேஷ், சந்தோஷ், அசோக் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....