உடுமலையில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்!

நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு உடுமலை நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேரு வீதியில் உள்ள மகாத்மா காந்தி விடுதியில் பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், காந்தி ஆசிரமம் உண்டு உறைவிட பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.



திருப்பூர்: உடுமலையில் நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி சங்கர் ஆலோசனைப்படி உடுமலை நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேரு வீதியில் உள்ள மகாத்மா காந்தி விடுதியில் பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 



உடுமலை நகர பொறுப்பாளர், திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ராமன் தலைமையில் இந்த அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் காந்தி ஆசிரமம் உண்டு உறைவிட பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மகாத்மா காந்தி விடுதிக்கு 25 டம்ளர்கள் வழங்கப்பட்டது.

உடுமலை நகர செயலாளர் காஜா மைதீன், இணைச் செயலாளர் சையது இப்ராஹிம், உடுமலை ஒன்றிய தலைவர் அபுதாகிர், உடுமலை ஒன்றிய செயலாளர் முகமது அசாரூதீன், உடுமலை ஒன்றிய இணைச் செயலாளர் அக்பர் பாஷா, ஒன்றிய இணைத்தலைவர் ரியாஸ் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...