காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி துவக்க விழா - புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு!

காரணம்பேட்டையில் நடைபெற்ற ‘திருப்பூர் மேற்கு காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி’ துவக்க விழாவில் சங்கத்தின் பட்டய தலைவராக ராமகிருஷ்ணன், பட்டய செயலாளராக கார்த்திகேயன், பட்டய பொருளாளராக நவீன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். மேலும் புதிய நிர்வாகிகள் ரோட்டரி சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.



திருப்பூர்: காரணம்பேட்டையில் நடைபெற்ற ‘திருப்பூர் மேற்கு காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி’ துவக்க விழாவில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். 



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் இன்று திருப்பூர் மேற்கு காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் இளங்கோவன் கலந்து கொண்டார். 

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக பட்டய தலைவராக ராமகிருஷ்ணன், பட்டய செயலாளராக கார்த்திகேயன், பட்டய பொருளாளராக நவீன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். இதைத்தொடர்ந்து ரோட்டரி உறுப்பினர்களாக ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டனர். 



மேலும் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள் ரோட்டரி சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

விழாவின் தொடர்ச்சியாக சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஓடந்துறை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மேற்கு ரோட்டரி நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...