உடுமலை திருப்பதி கோவில் 5ஆம் ஆண்டு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

உடுமலை திருப்பதி கோவிலில் 5ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரேணுகா தேவி அம்மனுக்கு 150 குடங்கள் மூலம் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: உடுமலை திருப்பதி கோவிலில் 5ஆம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி கோவிலில் 5ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரேணுகா தேவி அம்மனுக்கு 150 குடங்கள் மூலம் அபிஷேகம் செய்து பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

5ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாள், ஸ்ரீ ஆண்டாள், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் தன்வந்திரி பகவான், ஹயக்ரீவர் ஆஞ்சநேயர், கருடாழ்வார் தெய்வங்களுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜை பாலாஜி பட்டர் தலைமையில் நடைபெற்றது.



திருவள்ளூர் பெருமாள் கோவில் நாதஸ்வர வித்துவான் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் எஸ்.வி.புரம் ரேணுகா தேவி பஜனை குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. 



உற்சவருக்கு பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், நலுங்கு பொடி, விபூதி, பழங்கள் உட்பட பதினாறு வகை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.



இந்த சிறப்பு பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பதி கோவில் அறங்காவலர் குழு, திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...