நெடுஞ்சாலை அதிகாரிகளை கண்டித்து போத்தனூர் - வெள்ளலூர் சாலையில் பொதுமக்கள் மறியல்!

கோவை போத்தனூர் - வெள்ளலூர் பிரதான சாலை, சித்தன்னபுரம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளை கண்டித்து அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: போத்தனூர் - வெள்ளலூர் சாலையில் பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

கோவை போத்தனூர் - வெள்ளலூர் பிரதான சாலை, சித்தன்னபுரம் பகுதியில் சாலையோரங்களில் உள்ள பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து சுமார் 41 வீடு மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளது. 

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை சித்தன்னபுரம் பகுதிக்கு வந்த சாலை ஆய்வாளர் ஜெலின் தலைமையிலான அதிகாரிகள் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். 

அப்போது பொதுமக்கள் சாலை ஆய்வாளரிடம் மேலும் ஒரு நாள் அவகாசம் கொடுத்தால் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஆய்வாளர் அனுமதி வழங்காததால் நீண்ட நேரம் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் முன் பகுதிகளை மட்டும் அதிகாரிகள் இடித்துச் சென்றனர். 

இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் திடீரென நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து இரவில் வெள்ளலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போத்தனூர் போலீசார் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர். 

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...