கோவையில் கொள்ளையடிக்க இடையூறாக உள்ள நாய்களை திருடும் மர்ம நபர்கள்!

வடவள்ளி அடுத்த ஐ.ஓ.பி காலனி பகுதியை சேர்ந்த சுகன்யா என்பவர் வளர்த்து வந்த 2 நாய்கள் அடுத்தடுத்த நாட்கள் காணாமல் போன நிலையில், அவரது வீட்டில் மர்ம நபர்கள் வந்து சென்ற தடம் இருந்ததால், கொள்ளையடிக்க இடையூறாக இருந்த நாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக புகார் அளித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி அருகே கொள்ளையடிக்க இடையூறாக உள்ள நாய்களை மர்ம நபர்கள் திருடி வருவதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வடவள்ளி அடுத்த ஐ.ஓ.பி காலனி பகுதியை சேர்ந்தவர் சுகன்யா. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள தனி வீட்டில், தனது கணவருடன் சில ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். 

இந்நிலையில், அவர் தனது வீட்டில் இரண்டு நாய்கள் வளர்த்து வந்ததாகவும், அந்த நாய்கள் இருப்பதால் அப்பகுதியில் வரும் வன விலங்குகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களை கண்டால் சத்தம் போட்டு காட்டிக் கொடுத்து விடும். 

இதனால் அவர்கள் பயமின்றி வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது நாய் ஒன்றை காணவில்லை கூறப்படுகிறது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சிறிது நேரம் அக்கம்பக்கத்தில் தேடி வந்தனர். பின்னர் அது தானாக வந்து விடும் என எண்ணி வீட்டிற்கு சென்று விட்டனர். மீண்டும் இரவு நேரத்தில் நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது. 

வன விலங்குகள் நடமாட்டம் அப்பகுதியில் இருப்பதால் அதற்காக நாய்கள் சத்தம் போடுவதாக நினைத்து உறங்கியுள்ளனர். பின்னர் காலை எழுந்து பார்க்கும் போது அந்த மற்றொரு நாயும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், மர்ம நபர்கள் வீட்டிற்குள் வந்து சென்ற தடயங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து அவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பேசியதாவது, வீட்டிற்குள் புகுந்து கொள்ளை அடிக்கும் நபர்கள், நாய்களின் சத்தத்தால் பயந்து வந்த நிலையில், அதனை திருடி விட்டால் அவர்கள் அப்பகுதியில் கொள்ளை சம்பவங்களுக்கு இடையூறு இருக்காது என்பதால் நாய்களை திருடி இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...