கோவை காவல்துறையின் தெருவோர நூலகங்களுக்கு 200 புத்தகங்களை வழங்கிய மாணவி!

கோவை மாநகர காவல்துறையின் தெருவோர நூலகங்களை கண்ட ஐதராபாத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் கோவை சேர்ந்த மாணவி, இந்த நூலகங்களுக்காக 200 புத்தகங்களை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று வழங்கினார்.



கோவை: கோவை மாநகர காவல்துறையின் தெருவோர நூலகங்களுக்கு 200 புத்தகங்களை வழங்கிய 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் ஐதராபாத்தில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கோடை விடுமுறைக்காக கோவை வந்துள்ள நிலையில், கோவை மாநகரக் காவல் துறை சார்பாக வைத்துள்ள தெருவோர நூலகங்களை பார்த்துள்ளார். 

இந்நிலையில் அந்த நூலகங்களுக்கு 200 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். அந்த புத்தகங்கள் தற்போது, தெருவோர நாலகங்கள் மற்றும் ஆட்டோ நூலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மாணவி ஏற்கனவே 12 வயதில் புத்தகங்களை வீடு வீடாக போய் சேகரித்து அந்த புத்தகங்களை நூலகங்கள் அமைப்பதற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த மாணவி புத்தகங்களை சேகரித்து நூலகங்களை அமைப்பதற்கு எடுத்த முயற்சிக்காக இந்தியா முழுவதும் பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...