கோவையில் நண்பர்களிடையே குடிபோதையில் தகராறு - அரிவாளால் வெட்டியதில் ஒருவர் படுகாயம்!

கோவை சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் நண்பர்கள் இருவருக்கு இடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் கோபிநாத் என்பவர் வெட்டியதில் அழகர்சாமி படுகாயமடைந்தார். இது தொடர்பாக கோபிநாத்தை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டியதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாயி என்கிற அழகர் சாமி. இவர் கார் வாட்டர் வாஷ் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் கோழி என்கிற கோபிநாத் இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

இவர்கள் இருவரும் நேற்று அங்குள்ள ஒரு மதுபான பாரில் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோபிநாத், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அழகர்சாமியை தலையில் வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த கோபிநாத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். தகவலறிந்த துடியலூர் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அழகர்சாமியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...