கோவை மாநகராட்சி 15வது வார்டில் நகர்புற நலவாழ்வு மைய மருத்துவமனை திறப்பு!

கோவை மாநகராட்சி 15வது வார்டில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நகர்புற நலவாழ்வு மைய மருத்துவமனை சுப்பிரமணியம்பாளையம் பெரியார் நகரில் தொடங்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.



கோவை: கோவை மாநகராட்சியின் 15வது வார்டில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நகர்புற நலவாழ்வு மைய மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் கட்டப்பட்ட இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 



தொடர்ந்து 15வது வார்டு கவுன்சிலர் சாந்தமணி பச்சைமுத்து, உதவி நகரமைப்பு அலுவலர் விமலா, இந்த மையத்தின் மருத்துவர் ஹரிணி, கவுன்சிலர் உதவியாளர் சேக் அப்துல்காதர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். 



இந்த மருத்துவ மையத்தில் மருத்துவர், செவிலியர்கள், மருந்தாளுனர் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இருப்பார்கள் என்றும். அந்த நேரத்தில் நோயாளிகள் மருத்துவர்களை பார்த்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த மையத்தில் கர்ப்பகால மற்றும் பிரசவகால சேவைகள், சிசு மற்றும் குழந்தைகள் நல சேவைகள், குடும்ப நலம், நோயாளிகளுக்கான சிகிச்சைகள், பல் நோய்களுக்கான சிகிச்சை, விபத்து மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட 12 சேவைகள் அளிக்கப்படுகின்றன. 

இதனை சுப்பிரமணியம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மனோஜ், திமுக கட்சி நிர்வாகிகள் பழனிச்சாமி, நடராஜன், ஆறுச்சாமி, சின்னையன், கணேசன், சுகாதார மேற்பார்வையாளர் சக்திவேல், உதவியாளர் அன்பழகன், இளம் பொறியாளர் ஸ்ரீனிவாசன் மகேஷ், தொழில்நுட்ப உதவியாளர் தீபன் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...