கோவையில் டாஸ்மாக் விற்பனையாளரிடம் கத்தியை காட்டி ரூ.7.38லட்சம் கொள்ளை - இருவர் கைது!

கோவை பூலுவபட்டி அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7.38லட்சம் பணத்தை வழிப்பறி செய்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட இருவரை கைது செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை: கோவை மாவட்டம் பூலுவப்பட்டி அருகே டாஸ்மாக் விற்பனையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7.38 லட்சம் பணத்தை வழிப்பறி செய்த கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் பூலுவபட்டி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் சண்முகசுந்தரம். இவர் டாஸ்மாக் கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வரவு - செலவு கணக்குகளை பார்த்த பின் வீடு திரும்பி உள்ளார்.

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் விற்பனையான 7 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பணத்தையும், டாஸ்மாக் பதிவேடு, ஆகியவற்றை கடையில் வைக்காமல் கைப்பை ஒன்றில் போட்டுக் கொண்டு வீட்டிற்கு எடுத்துச் சென்று உள்ளார்.

அவருடன் மாதம்பட்டி டாஸ்மாக் கடையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த போது சிறுவாணி - வடிவேலம்பாளையம் சாலையில், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் சண்முகசுந்தரத்தை வழிமறித்து கத்தியை காண்பித்து மிரட்டி பணம் வைத்திருந்த பையை பறித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சண்முகசுந்தரம் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர், ஆலாந்துறை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பூலுவபட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த அந்தோணி ராஜ், மிலன் ஆகிய இருவரை ஆலாந்துறை காவல்துறையினர் கைது செய்தனர். இருவரிடமிருந்து 2 செல்போன்கள், 2 வாள்கள் மற்றும் ரூ.40,000 பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

மேலும், தற்போது கைது செய்யப்பட்டவர்கள் சம்பவத்தில் நேரடியாக ஈடுபடாமல், மூளையாக செயல்பட்டு உதவி செய்தவர்கள் என்றும், சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட மேலும் 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...