பொள்ளாச்சி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது - 2.80 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஹக்கீம் (39) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 2.80 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.



கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் ஆனைமலை போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஆனைமலை ஆற்றுப்பாலம் அருகே கஞ்சாவுடன் வலம் வந்த ஹக்கீம் (39) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 2.80 கிலோ கஞ்சா, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பொள்ளாச்சியை சேர்ந்த ஹக்கீம் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து அதனை ஆனைமலை பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...