ஓய்வூதியத்தை உயர்த்தக்கோரி மத்திய அரசுக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்!

ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஜி.என்.மில்ஸ் தபால் அலுவலகம் அருகில் சுமார் 100க்கும் மேற்பட்ட இ.பி.எப் ஓய்வூதியதாரர்கள் மத்திய அரசுக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் ஓய்வூதியதாரர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் பஞ்சாலை மற்றும் இன்ஜினியரிங் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் சுமார் 3 லட்சத்திற்கு மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் இதுவரை ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இதனை உயர்த்த வேண்டும் என்றுகூறி இ.பி.எப் ஓய்வூதியதாரர்கள் நலச்சங்கம் சார்பாக சென்னையில் கூட்டம் நடைபெற்றது.

அதற்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் மணியோசை எழுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மே 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக இன்று கோவை ஜி.என்.மில்ஸ் தபால் அலுவலகம் அருகில் சுமார் 100க்கும் மேற்பட்ட இ.பி.எப் ஓய்வூதியதாரர்கள் தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். அனைவரையும் உறுப்பினர் தேவேந்திரன் வரவேற்று பேசினார்.



சங்க உறுப்பினர் மெளனசாமி சிறப்புரை வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் பென்சனை உயர்த்தகோரி குறைந்த பட்சம் ரூ.9 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும், இடைகாலமாக மாதம் ரூ.3 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்கவேண்டும். இ.பி.எப் ஓய்வூதியதாரர்களுக்கு இ.எஸ்.ஐ திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தகுதியுள்ள அனைவருக்கும், உயர் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு பறிக்கப்பட்ட ரயில் கட்டண சலுகையை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...