மார்க்கெட்டை இடமாற்றம் செய்தால் பல்வேறு வசதிகளை செய்து தர வேண்டும் - வியாபாரிகள் சங்கம் மனு!

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த காய்கனி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும் போது, தரமான சாலைகளுடன் சுற்றுச்சுவர், மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தர வலியுறுத்தி ஆட்சியரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.



கோவை: மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் போது பல்வேறு வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். 

கோவை மாநகராட்சி நிர்வாகம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த காய்கனி மார்க்கெட்டை அபிவிருத்தி செய்ய முடிவெடுத்துள்ளது. இதனால் அங்குள்ள கடைகளை எருக்கம்பெனி மைதானத்தில் அமைத்துக் கொள்ளும்படி வியாபாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது. 



இந்நிலையில் எம்ஜிஆர் மார்க்கெட் காய்கனி வியாபாரிகள் சங்கத்தினர் தாங்கள் அதே இடத்திலேயே கடைகளை அமைத்துக் கொள்கிறோம் எனவும் வேறு இடத்திற்கு மாற்றும் பொழுது தங்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் எருக்கம்பெனி வளாகத்தில் சாலைகள் கழிப்பிட வசதி, மின் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எவ்வித வசதிகளும் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த இடத்தில் கடைகளை அமைக்கும் பொழுது 20 டன், 30 டன் லோடு ஏற்றி வரும் வாகனங்கள் மண்ணில் புதைந்து விடும். 

எனவே புதிய மார்க்கெட் இடமாற்றம் செய்யும் பொழுது கடைகள் அமைப்பதற்கான வசதி, தரமான சாலைகளுடன் சுற்றுச்சுவர், மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் உணவருந்த தேவையான கேண்டீன் உள்ளிட்ட வசதிகள் சாக்கடை வசதி காய்கறிகளை இறக்கி வைத்து வியாபாரம் செய்ய போதுமான இடங்கள் ஆகியவற்றை செய்து தர வேண்டும். 

அதுவரை தாங்கள் இதே இடத்திலேயே வியாபாரம் செய்து கொள்வதாகவும் சாலைகளை மட்டும் பழுது பார்த்துக் கொடுத்தால் போதுமானது. 

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...