பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என சிஐஐ தலைவர் நாராயணன் தகவல்

பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என சிஐஐ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிஐஐ தலைவர் நாராயணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஜிடிபி குறித்த அறிக்கையின் படி இந்தியாவின் பொருதாராம், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகும் சிறந்த வளர்ச்சி அடைந்துள்ளது. 

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜிடிபி அறிக்கையின் படி 2017 ஆம் பொருளாதார ஆண்டில் பொருளாதாரம் சுமாரான வளர்ச்சியை அடைந்துள்ளது. நம்முடைய நாட்டின் வளர்ச்சியின் விகிதம் 7 சதவிகிதம் என்ற அளவிலேயே உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்புகளை நாம் கடந்துகொண்டிருக்கிறோம். வரும் காலங்களில் இன்னும் அதிகமான வளர்ச்சி விகிதங்களை எட்டுவோம். பெரும்பாலான பெரு நிறுவனங்கள் தங்களுடைய பரிவர்த்தனைகளை பணம் இல்லாமல் செய்யக் கூடிய வகையில் மாற்றி அமைத்துக்கொண்டுள்ளனர். இது எதிர்வரும் காலங்களில் பொருளாதாரத்தில் மிகுந்த முன்னேற்றங்களை கொண்டு வரும். 

நுகர்வோர்கள் டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிவர்த்தனை செய்வது எவ்வளவு எழிதானது என்பது குறித்து உணர்ந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். கிராமப்புரங்களிலும் மக்கள் இப்பரிவர்த்தனை முறைக்கு மாறிவிட்டனர். பல்வேறு துறைகளில் இருந்து வரும் தகவல்களின் படி விற்பனை குறைந்திருந்தாலும் தற்பொழுது அது மீண்டும் நல்ல நிலையை நோக்கி திரும்பியுள்ளது. இந்நடவடிக்கையில் குறைவாக பாதிக்கப்பட்ட மற்றொரு துறை விவசாயம். ராபி பருவகால அறுவடை குறித்து மிகுந்த கவலை நிலவியது. ஆனால் தற்போது வெளியிடப்பட்ட தகவலின் படி விவசாய உற்பத்தி சாதனை அளவுகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்முடைய கவனத்தை தற்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து தொழில் செய்வதில் எழிமை, மேக் இன் இந்தியா திட்டம் ஆகியவற்றின் மீது செலுத்த வேண்டும். அவை நம்முடைய வளர்ச்சியை அதிகரிக்கவும், நாட்டின் மீதுள்ள நமது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய உதவிகரமாக இருக்கும்.

இப்பொருளாதாரம் முன்னேற்றப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. வெளிப்புற சூழல்களில் இருந்து நமக்கு உதவி கிடைக்குமானால் 2018ஆம் ஆண்டில் நமது பொருளாதார வளர்ச்சி மிகச் சிறந்த உயரத்தை எட்டும் என நாராயணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...