வெள்ளலூர் அருகே மதுபோதையில் மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலியான சோகம்!

வெள்ளலூர் அடுத்த நஞ்சுண்டாபுரம் தேவேந்திர வீதியை சேர்ந்த ஜெயக்குமார்(45) என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில் குடிபோதையில் ஆலமரத்தின் மீது ஏறிய அவர், எதிர்பாராத விதமாக கீழே விழுந்து படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கோவை: கோவை வெள்ளலூர் அருகே மதுபோதையில் ஆலமரத்திலிருந்து கீழே விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் லியான சோகம்.

கோவை நஞ்சுண்டாபுரம் தேவேந்திர வீதியை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி என்பவரது மகன் ஜெயக்குமார் (45). பெயிண்டரான இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார். ஜெயக்குமார் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுகுணா ஜெயக்குமாரை பிரிந்து திருப்பூரில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. 

அப்போது, மது போதையில் வந்த ஜெயக்குமார் அப்பகுதியில் இருந்த ஆலமரத்தின் மீது ஏறி அமர்ந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து கீழே விழுந்த ஜெயக்குமார் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...