கோவை அருகே ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது - 450 கிலோ அரிசி பறிமுதல்!

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் கோவை - பாலக்காடு சாலை வாளையார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது, கேரள பதிவெண் கொண்ட காரில் 450 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் முயன்ற நபரை கைது செய்த போலீசார், அவரை வேவு பார்க்க வந்த மற்றொருவரையும் கைது செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வாளையார் அருகே ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு தலைவர் காமினி உத்தரவின் பேரில், கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கோவை - பாலக்காடு சாலை வாளையார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கேரளா பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து காரை ஓட்டி வந்த கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சிகாப் (35) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.



இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வேவு பார்க்க வந்த கேஜி சாவடி பகுதியை சேர்ந்த பாஸ்கர் (25) என்பவரையும், போலீசார் மடக்கி பிடித்தனர். 

இவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பாஸ்கரன் என்பவர் மூலமாக போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் மலிவு விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை கேரளாவில் உள்ள கள்ளச் சந்தைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. 

இதை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 450 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...