வால்பாறை அருகே தனியார் ஹோட்டலில் திடீர் தீ விபத்து - 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

வால்பாறை பழைய பேருந்து நிலையம் அருகே சத்தியபாமா என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில் நள்ளிரவு ஒரு மணி அளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான தீயில் கருகி சேதமடைந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


கோவை: வால்பாறை அருகே தனியார் ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்து உள்ளன.

கோவை மாவட்டம் வால்பாறை புதிய பேருந்து நிலையம் பகுதியில் சத்தியபாமா என்பவருக்கு சொந்தமான சிட்டி ஹோட்டல் கடந்த இரண்டு வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வந்த நிலையில் ஹோட்டலில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் உணவருந்த அதிகளவில் வந்து செல்கின்றனர்.



இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சுமார் 1 மணி அளவில் ஹோட்டல் கடைக்குள் புகை மூட்டம் ஏற்பட்டு, திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.



இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் தீயணைப்புத் துறையினர் சிறிது நேரம் போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்த தீ விபத்தில் கடைக்குள் இருந்த சேர், டேபிள், மளிகை பொருட்கள், பிரிட்ஜ், கிரைண்டர், உணவு பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதம் அடைந்தன.



இந்த தீ விபத்தில் சுமார் 3 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதமடைந்து உள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.



மேலும் இந்த தீ விபத்து குறித்து வால்பாறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...