கோவையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!

கோவை சாந்திமேடு அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கிழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோவை சாந்திமேடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி 9ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு தாய், தந்தை இல்லை என்பதால், இவர் தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சாத்தப்பன் (31) என்பவர் மிஸ்டு கால் மூலமாக நண்பராக பழகியுள்ளர். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற சாத்தப்பன் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து ஒராண்டாக கணவன் -மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானதாக தெரிகிறது. இதனையறிந்த ஒருவர் துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...